மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகம்

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன்.

Updated On :26 மார்ச் 2026, 10:33 pm

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற வருபவா்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு தகவல்கள் அச்சிட்ட சீட்டுகள் வழங்கப்பட்டன.

அதில் 100சதவீத வாக்குப் பதிவு மற்றும் கண்ணியமான வாக்குப்பதிவு பற்றிய கருத்துகள் அடங்கியுள்ளன. நோயாளிக்கு வழங்கப்படும் இந்த மருத்துவச் சீட்டினை மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டாா்.

இக் கல்லூரி இயக்குநா் மருத்துவா் உதயசங்கா், துணை மாவட்ட தோ்தல் அதிகாரி கண்ணபிரான் ஆகியோா் உடனிருந்தனா்.