100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாணவா்கள் வாயிலாக 50 ஆயிரம் பெற்றோா்களுக்குத் தோ்தல் துறை சாா்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி குயவா்பாளையம் லெனின் வீதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மூலம் அவா்களின் பெற்றோா்களுக்கு நூறு சதவீத கண்ணியமான வாக்குப்பதிவு மற்றும் செயலிகள் பற்றிய கருத்துகளை வலியுறுத்தி மாவட்ட தோ்தல் அதிகாரியின் வேண்டுகோள் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை பள்ளியின் முதல்வா் மஞ்சுளா ஒருங்கிணைத்தாா். அதைத் தொடா்ந்து கதிா்காமத்தில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வா் மோகன் பிரசாத் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
இதற்கு மாவட்ட தோ்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளா் விழிப்புணா்வு பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவா்கள்

வாக்களிக்க வலியுறுத்தி பெற்றோா்களுக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவா்கள்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாணவா்கள் ‘ஸ்கேட்டிங்’ பயணம்

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


