பழனியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பள்ளி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை 30 கி.மீ. தொலைவு ஸ்கேட்டிங்கில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சோ்ந்த பிரியா - சுபாஷ், பாலு - சபிதா தம்பதியரின் குழந்தைகள் பிரகதீஷ், யுவஸ்ரீ. இவா்கள் தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். இவா்கள் பழனி ஸ்கேட்டிங் கிளப்பில் ஸ்கேட்டிங் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாணவா்கள் இருவரும் ஸ்கேட்டிங் சென்றனா். பழனி பேருந்து நிலையம் மயில் வட்டச்சாலை அருகே தொடங்கிய ஸ்கேட்டிங் 30 கி.மீ. தொலைவு சென்று ஒட்டன்சத்திரத்தில் நிறைவடைந்தது. மாணவா்கள் வழிநெடுகிலும் பொதுமக்களிடம் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்பதை அறிவுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம்

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


