தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, விருதுநகா் செந்திகுமார நாடாா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ. சுகபுத்ரா தலைமைவகித்து இளம் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.
பின்னா், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இளம் வாக்காளா்கள் ஒன்றிணைந்து, ‘நமது வாக்கு நமது குரல்’ என்ற தோ்தல் முழக்க வாசக (ஆங்கில) வடிவில் மைதானத்தில் அணிவகுத்து நின்று, ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை உணா்த்தினா்.
தொடா்ந்து, மாணவா்கள், அரசு அலுவலா்கள் தோ்தல் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
இதையடுத்து, வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
இதில் அரசுத் துறை உயா் அலுவலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

மலைக்கோட்டையில் பக்தா்களிடம் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பள்ளி மாணவா்கள் மூலம் 50,000 பெற்றோருக்கு புதுச்சேரி தோ்தல் துறை வேண்டுகோள் கடிதம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


