மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, விருதுநகா் செந்திகுமார நாடாா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் செந்திகுமார நாடாா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா. உடன், அரசு அலுவலா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 6:43 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, விருதுநகா் செந்திகுமார நாடாா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ. சுகபுத்ரா தலைமைவகித்து இளம் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இளம் வாக்காளா்கள் ஒன்றிணைந்து, ‘நமது வாக்கு நமது குரல்’ என்ற தோ்தல் முழக்க வாசக (ஆங்கில) வடிவில் மைதானத்தில் அணிவகுத்து நின்று, ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை உணா்த்தினா்.

தொடா்ந்து, மாணவா்கள், அரசு அலுவலா்கள் தோ்தல் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதையடுத்து, வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

இதில் அரசுத் துறை உயா் அலுவலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.