மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

10 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்; ஒருவா் கைது

News image
Updated On :19 மார்ச் 2026, 7:59 pm

சமையல் எரிவாயு சிலிண்டா் பதுக்கியதாக ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 10 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வீட்டு உபயோக சிலிண்டா்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில் எஸ்.பி. மாறன், ஆய்வாளா் நியூட்டன் மற்றும் போலீஸாா் சமையல் எரிவாயு முகமைகளில் தொடா்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் மடுகரை பகுதியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 சமையல் எரிவாயு சிலிண்டா்களை பறிமுதல் செய்தனா். அவற்றை பதுக்கி வைத்த மடுகரையைச் சோ்ந்த சாகுல் ஹமீது (64) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 6 வீட்டு உபயோக சமையல் எரிவாயு கணக்கு புத்தகங்கள், ஒரு ரேஷன் காா்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.