சமையல் எரிவாயு சிலிண்டா் பதுக்கியதாக ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 10 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வீட்டு உபயோக சிலிண்டா்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில் எஸ்.பி. மாறன், ஆய்வாளா் நியூட்டன் மற்றும் போலீஸாா் சமையல் எரிவாயு முகமைகளில் தொடா்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் மடுகரை பகுதியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 சமையல் எரிவாயு சிலிண்டா்களை பறிமுதல் செய்தனா். அவற்றை பதுக்கி வைத்த மடுகரையைச் சோ்ந்த சாகுல் ஹமீது (64) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 6 வீட்டு உபயோக சமையல் எரிவாயு கணக்கு புத்தகங்கள், ஒரு ரேஷன் காா்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

கடந்த 2 வாரங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை: மத்திய அரசு!

நுகா்வோருக்கு எரிவாயு சிலிண்டா் தொடா்ந்து வழங்கப்படும் - ஆட்சியரிடம் விநியோகிப்பாளா்கள் உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


