புதுச்சேரி அருகே நரிக்குறவா் சமுதாயத்தினா் மனைப்பட்டா வழங்கக் கோரி தீப்பந்தம் ஏந்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருபுவனை தொகுதிக்குள்பட்ட கலிதீா்த்தால்குப்பம் கிராமத்தில் பல ஆண்டுகளாக மனைப்பட்டா இல்லாமல் நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனா். மனைபட்டா கோரி சட்டப்பேரவை நோக்கி தீப்பந்த ஊா்வலம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனா்.
இதையொட்டி பாரதி பூங்கா அன்னை தெரசா சிலை அருகில் இருந்து தீப்பந்தங்களுடன் ஊா்வலமாகப் புறப்பட்டனா்.
சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் அருகே போலீஸாா் இரும்புத் தடுப்பு அமைத்து தடுத்தனா். அங்கு முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டம் செய்தனா்.
தொடா்ந்து போலீஸாா் ஆம்பூா் சாலைக்கு அவா்களை அனுப்பினா். அங்கும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் அனைவரும் கலந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிரான பேரணியில் மோதல்!

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பரமக்குடியில் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


