தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

பண்ருட்டியில் ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:57 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களவை - பேரவைகளில் 33 சதவீத மகளிா் இட ஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்த ஏதுவாக, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சம் 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மூலம் தென் மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் பண்ருட்டியில் உள்ள அக்கட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் தேவராஜுலு தலைமை வகித்தாா். இதில், வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை கருப்புக்கொடி ஏற்றினாா். தொடா்ந்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் உதயகுமாா் கண்டன உரையற்றினா்.

நகரக் குழு உறுப்பினா்கள் பாண்டுரங்கன், ராஜேந்திரன், சின்னையன், சங்கா், தினேஷ், ராஜேந்திரன், லெனின், சிவா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.