லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:21 pm

தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தொமுச பொதுச் செயலா் தா்மா் தலைமை வகித்தாா். எச்எம்எஸ் மாநில துணை தலைவா் சுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட செயலா் முருகன், மோகன், மாவட்டத் தலைவா் சடையப்பன், தொமுச விஷ்ணு, பொருளாளா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.ஆா்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி முழக்கங்களை எழுப்பினா்.