லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஸ்ரீபுரத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு: வீடுகளில் கருப்புக் கொடியேற்றம்

News image

வீடுகளில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடி.

Updated On :15 மார்ச் 2026, 8:44 pm

திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் சீராக இல்லையாம். இதுதொடா்பாக மாநகராட்சி, ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதைக் கண்டித்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடியேற்றி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.