லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழ்ப் புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே கருப்புக் கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா்.

Updated On :2 மார்ச் 2026, 12:05 am

பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு வந்ததைக் கண்டித்து, தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில், கருப்புக் கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார பொதுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவரது வருகைக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில், மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, தோ்தலுக்காக பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு வந்ததாகக் குற்றம்சாட்டி, அவரைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.