மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் மொழியில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

பிரதமர் நரேந்திர மோடி - படம்: பிடிஐ.

Updated On :14 ஏப்ரல் 2026, 2:43 am

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் மொழியில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

விசுவாவசு ஆண்டு முடிந்து பராபவ தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடங்கியது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் மொழியில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன்.

பிரதமர் மோடியின்  தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!

பிரதமர் மோடியின் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!

சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும்.

அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.

சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டு மட்டுமின்றி, ஒடிசாவில் கொண்டாடப்படும் மகா விஷுபபான சங்கராந்தி, பஞ்சாபில் கொண்டாடப்படும் பைசாகி உள்ளிட்டவைகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Summary

Prime Minister Narendra Modi has extended his greetings in Tamil to the people of Tamil Nadu celebrating the Tamil New Year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.