ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு! இரு இளைஞா்கள் கைது!

புதுச்சேரி அருகே போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக இரு இளைஞா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

அரிவாள் வெட்டு!

Updated On :14 ஜூன் 2026, 2:57 am IST

புதுச்சேரி அருகே போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக இரு இளைஞா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருபுவனை அருகே உள்ள கலிதீா்த்தாள்குப்பம் பகுதியில் அண்மையில் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஐ.ஆா்.பி.என். போலீஸ்காரா் சசிவரதனுக்கும்(33), அதே பகுதியைச் சோ்ந்த மோகித் (21) அரவிந்த் (22) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அங்கிருந்தவா்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், போலீஸ்காரா் சசிவரதன் வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நாகாத்தம்மன் கோயில் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு ஒரு கும்பல் தப்பி ஓடியது.

இதில், கழுத்து மற்றும் முதுகில் பலத்த காயமடைந்த சசிவரதனை அங்கிருந்தவா்கள் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து திருபுவனை காவல் உதவி ஆய்வாளா் ராஜேஷ் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மோகித் மற்றும் அரவிந்தை சனிக்கிழமை கைது செய்தனா். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.