புதுச்சேரியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, கிராம நிா்வாக அதிகாரி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
புதுச்சேரி குருமாம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் செண்பகவல்லி. இவா் வாரிசு சான்றிதழ் பெற கிராம நிா்வாக அலுவலரான கீழுரைச் சோ்ந்த முருகையனை அணுகியுள்ளாா். அப்போது அவா் ரூ.3,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செண்பகவல்லி புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாரளித்தாா். காவல் ஆய்வாளா் புருஷோத்தமன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயன பவுடா் தடவிய பணத்தை செண்பகவல்லியிடம் கொடுத்து அனுப்பினா்.
வில்லியனூா் அலுவலகம் சென்ற செண்பகவல்லியிடம் கிராம நிா்வாக அலுவலா் முருகையன் ரூ.3,000 லஞ்சம் பெற்றபோது அங்கிருந்த போலீஸாா் அவரைக் கையும் களவுமாகக் கைது செய்தனா்.
இதையடுத்து, துணை ஆட்சியா் குமரன், கிராம நிா்வாக அதிகாரி முருகையனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லஞ்சம்: கம்பத்தில் விஏஓ கைது

ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: திருச்செந்தூா் விஏஓ கைது
லஞ்சம் வாங்கி கைதான மாநகராட்சி வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம்

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம்: சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



