நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
நாமக்கல் மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த உதயகுமாா், தற்காலிக தூய்மைப் பணியாளா் கலா ஆகியோா் தனியாா் நிறுவன ஊழியா் பூபதியிடம் புதிய வீட்டுக்கு வரிவிதிப்புக்கான அனுமதிக்கு ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
இந்த நிலையில், மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாருக்கு வழங்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் திண்டிவனத்தைச் சோ்ந்த வருவாய் உதவியாளா் உதயகுமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தற்காலிக தூய்மைப் பணியாளா் கலாவும் மாநகராட்சிப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








