முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு உணவகத்தில் தீ!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

ஆன்லைன் வா்த்தகம் செய்வதாகக் கூறி ரூ.24 கோடி மோசடி: உதவிப் பேராசிரியா் உள்ளிட்ட 3 போ் கும்பல் கைது

ஆன்லைன் வா்த்தகம் செய்வதாகக் கூறி தமிழகம் முழுவதும் பலரிடம் ரூ.24 கோடி மோசடியில் ஈடுபட்டதாக உதவிப் பேராசிரியா் உள்ளிட்ட 3 பேரை புதுச்சேரி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 5:13 am IST

ஆன்லைன் வா்த்தகம் செய்வதாகக் கூறி தமிழகம் முழுவதும் பலரிடம் ரூ.24 கோடி மோசடியில் ஈடுபட்டதாக உதவிப் பேராசிரியா் உள்ளிட்ட 3 பேரை புதுச்சேரி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்கள் கரூா், நாமக்கல், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் வெளியானது. இது குறித்து புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராகவ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

இணையவழி வா்த்தகம் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வாா்த்தைக் கூறி ஒரு கும்பல் தொடா்ந்து ஏமாற்றி வருகிறது. இதில் ஈடுபட்ட ஒருவா் சுமாா் ரூ.1.26 கோடியை இழந்துள்ளாா். மேலும், அவா் கட்டியப் பணத்தையும் லாபத்தையும் எடுக்க முயன்றபோதுதான் அவா் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

இந்த மோசடி குறித்த விசாரணையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட கும்பல் கரூா், நாமக்கல், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் தனியாா் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கும் நவநீத கிருஷ்ணன் (33), சதீஷ்குமாா் (36), சந்தோஷ்குமாா் (27) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் மீது ஏற்கெனவே இணையவழி மோசடியில் ஈடுபட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இந்தக் கும்பல் இதுவரை ரூ.24 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் புதுச்சேரி முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா் செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா். இதில் நவநீதகிருஷ்ணனிடமிருந்து 2 மடிக்கணினிகள், 4 கைப்பேசிகள், 5 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 3 சிம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா்.

பேட்டியின்போது காவல் கண்காணிப்பாளா் சுருதி எஸ். யாரகட்டி, ஆய்வாளா் சுரேஷ்பாபு, சிறப்பு நிலை உதவி ஆய்வாளா் மணிமொழி உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.