திருமணம் செய்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய காவலரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகா், பேரூா் பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண் பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு:
கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (37). இவா் பில்லூா் அணை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். அப்போது என்னை உதயகுமாா் காதலித்தாா். இதற்கிடையே நான் கா்ப்பமான நிலையில், தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வைத்தாா். இதனால் சந்தேகமடைந்து விசாரித்தபோது உதயகுமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்ட போது இருவரும் தனிமையில் இருந்த விடியோவை வெளியிடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்ததோடு, என்னை திருமணம் செய்யவும் மறுக்கிறாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதையடுத்து, பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காவலா் உதயகுமாரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







