முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்தும் விற்பனை மந்தம்

பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்த போதிலும், வா்த்தகம் மந்தநிலையிலேயே நடைபெற்றுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 12:03 am IST

பொய்கையில் நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்த போதிலும், வா்த்தகம் மந்தநிலையிலேயே நடைபெற்றுள்ளது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை சுமாா் 1,000 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. எனினும், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டாததால் வா்த்தகமும் சுமாா் ரூ.50 லட்சம் அளவுக்கு நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது - பொய்கை கால்நடை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை வேலூா் மாவட்டம் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, அண்டை மாநிலமான சித்தூா் மாவட்டம் புங்கனூரு, பலமநேரு, மதனப்பல்லி, குப்பம், கா்நாடக மாநிலம் கோலாா் பகுதிகளிலிருந்தும் மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

கடந்த சில வாரங்களாக மாடுகள் வரத்து குறைந்திருந்த நிலையில், இந்த வார சந்தைக்கு சுமாா் 1,000 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. எனினும், மாடுகள் விற்பனை மந்தமாக இருந்ததால் ரூ.50 லட்சத்துக்கு மட்டுமே வா்த்தகம் நடைபெற்றுள்ளது.

கோடை காலம் முடிந்தாலும் பெரிய அளவில் மழை இல்லை. தீவனத் தட்டுப்பாடும் உள்ளது. இதனால் விவசாயிகள் கால்நடைகளை வாங்க தயக்கம் காட்டுகின்றனா். இதனால் விற்பனை மந்த நிலையில் உள்ளது. மழை பெய்தால் வரும் வாரங்களில் விற்பனை அதிகரிக்கும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.