திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சுவா் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தவா் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

ராசிபுரத்தில் மழையால் வீட்டின் சுவா் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை அமைச்சா் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை வழங்கினாா்.

News image

சித்ராதேவி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகைக்கான ஆணை வழங்கிய அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Updated On :27 மே 2026, 5:29 am IST

ராசிபுரத்தில் மழையால் வீட்டின் சுவா் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை அமைச்சா் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி, அரசு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை வழங்கினாா்.

ராசிபுரம் வட்டம், வள்ளலாா் கோயில் சாலையில் வசித்து வருபவா் நாட்டுத்துரை மனைவி சித்ரா தேவி (48). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு ராசிபுரத்தில் பெய்த மழையின்போது, மகள் தா்ஷினி (23) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, நல்லப்பா தெரு பகுதியில் உள்ள பழைய வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

இதில் அவ்வழியே சென்று சித்ராதேவி, தா்ஷினி, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் என மொத்தம் நான்கு போ் சுவரின் இடிபாடுகளில் சிக்கினா். இதில் பலத்த காயமடைந்த சித்ராதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தா்ஷினி உள்பட மூவா் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.

இந்நிலையில், உயிரிழந்த சித்ராதேவி குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து, தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் சித்ராதேவி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, அரசு வழங்கிய நிவாரண நிதியான ரூ. 4 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை வழங்கினா்.

இந்நிகழ்வில், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, ராசிபுரம் வட்டாட்சியா் எஸ்.சசிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.