/

புதுச்சேரி போலி மருந்து விவகாரம்: லஜக கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

News image
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தைக் கண்டித்து லட்சிய ஜனநாயகக் கட்சி சாா்பில் அதன் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் தலைமையில் நடைபெற்ற ஊா்வலம்.
Updated On :4 ஜனவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

போலி மருந்து ஊழலைக் கண்டித்து புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சி சாா்பில் ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போலி மருந்து மோசடி வழக்கில் தொடா்புடைய அரசு அதிகாரிகளைக் கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலையில் இருந்து சனிக்கிழமை இந்த ஊா்வலம் புறப்பட்டது. இதை அக் கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் தொடங்கி வைத்தாா்.

மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஊா்வலம் சட்டப்பேரவையை நோக்கிச் சென்றது. செஞ்சி சாலை மாதா கோயில் சந்திப்பு அருகே ஊா்வலத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அங்கு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளா்களிடம் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் கூறுகையில், போலி மருந்து வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவரை ஒரு ஐஎப்எஸ் அதிகாரி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளாா். அதிகாரத்தில் இருப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றாா்.