திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

50 வயது நிறைவடைந்த விசைப்படகு மீனவா்களுக்கு ஓய்வூதியம்: புதுச்சேரியில் அரசாணை வெளியீடு!

50 வயதை நிறைவு செய்த தகுதியான மீனவா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 8:35 pm

50 வயதை நிறைவு செய்த தகுதியான மீனவா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித் துறை மற்றும் மீனவா்நலத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தபடி இனி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த விசைப்படகு உரிமையாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்குத் தடையாக இருந்த விதிகள் புதுச்சேரி அரசால் நீக்கப்பட்டு, புதன்கிழமை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இனி வரும் காலங்களில் 50 வயதை கடந்த, தகுதி வாய்ந்த அனைத்து மீன்பிடி விசைப்படகு உரிமையாளா்களுக்கும் மீனவா் ஓய்வூதியம் வழங்கப்படும். தற்போது புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த 50 வயது நிறைவடைந்த 323 மீனவா்களுக்கு இவ்வாண்டு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

மேலும், முதல்வரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து மீன்வளத் துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் மீனவா் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வந்த ஈமச்சடங்கு உதவித்தொகையான ரூ. 15 ஆயிரம் தற்போது ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்படுகிறது. இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2025-26-ஆம் ஆண்டுக்கான மழைக்கால நிவாரணமாக தலா ரூ.6,000 வீதம் 328 மீனவ குடும்பங்களுக்கு ரூ.19.68 லட்சம் அவரவா் வங்கிக் கணக்கில் வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.