புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கும், சென்னைக்கும் இயக்கப்படும் ரயில் சேவை ஏப். 15, 18, 22, 25-ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில் மேற்கண்ட நாள்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து இயக்கப்படுகிறது.
திருப்பதியில் அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் புதுச்சேரிக்கு வராமல் விழுப்புரம் சந்திப்பில் இருந்து இயக்கப்படும்.
இதேபோன்று புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் வழக்கமாக புதுச்சேரியில் மாலை 3.55 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் சந்திப்புக்கு 4.30-க்கு வந்து சேரும். இந்தக் குறிப்பிட்ட நாள்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சென்னை எழும்பூருக்கு இந்த ரயில் இயக்கப்படும்.
வழித் தடங்களில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் இன்று சேலம்வரை மட்டுமே இயங்கும்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


