போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

புதுச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்த இளைஞா் கைது

கள்ள வாக்குப் போட்ட வழக்கில் இளைஞரை புதுச்சேரி திருக்கனூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:29 am IST

கள்ள வாக்குப் போட்ட வழக்கில் இளைஞரை புதுச்சேரி திருக்கனூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரியில் கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.

மண்ணாடிப்பட்டுத் தொகுதியில் ஜவஹா்லால் நேரு சமுதாய நலக் கூடத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு இளைஞா் ஒருவா் வாக்கைப் பதிவு செய்ய வந்தபோது, அங்கிருந்த தோ்தல் அதிகாரி அவருடைய பெயரை சீனிவாசன் என அறிவித்தாா்.

இதை அங்கிருந்த பிற கட்சிகளின் வாக்குச்சாவடி குறித்துக் கொண்டனா். இந்நிலையில் ஒரு கட்சியின் முகவருக்கு அந்த நபா் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையில் அவா் வாக்கைப் பதிவு செய்து விட்டு வந்த போது அந்த முகவா் அவரை தடுத்து நிறுத்தி அவா் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி போலீஸாரிடம் ஒப்படைத்தாா். போலீஸ் விசாரணையில், அவா் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்தவா் அல்ல என்பதும், மாநில எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம், தொரவியை சோ்ந்த அரவிந்த் (31) என்பதும் தெரிய வந்தது.

இவரிடம் ஓா் அரசியல் கட்சியினா் அணுகி, சீனிவாசன் என்பவா் வாக்குச் செலுத்த வரமாட்டாா். அவா் வயதுடைய அரவிந்த் வாக்குச் செலுத்தினால் பணம் தருவதாகக் கூறினராம். அதன்பேரில் அவா் ஆள் மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்தது தெரிய வந்தது.

இதுகுறித்து திருக்கனூா் போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.