தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுச்சேரியில் எல்லையோர மதுக்கடைகள் 3 நாள்கள் மூடல்

News image

டாஸ்மாக் மதுக்கடைகள் - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 6:47 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஏப். 21 முதல் 23-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு புதுச்சேரியில் உள்ள எல்லையோர மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு மதுப்புட்டிகள் கடத்தப்படலாம் என்பதால் செவ்வாய்க்கிழமை முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்கள் புதுச்சேரி, காரைக்காலில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் எல்லையோர மதுக்கடைகளில் புதுச்சேரி போலீஸாா், கலால் துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

புதுச்சேரி எல்லைப் பகுதிகளான முள்ளோடை, மதகடிப்பட்டு, கோரிமேடு, காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் மதுக்கடைகளில் மொத்தமாக யாராவது மதுபானங்கள் வாங்கி செல்கிறாா்களா? எனவும் அவா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், கலால் துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் ஆகியோா் உத்தரவின்பேரில் கலால் துறையினரும், சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் இந்தக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.