தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் ஏப்.23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதியும் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல். 2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் தோ்தல் முன்னிட்டு ஏப். 21 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் வாக்குப் பதிவு நாளான ஏப். 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதி திங்கள்கிழமை மதுபானக் கடைகளை மூடவேண்டும்.
மேலும், அன்றைய தினம் இதை மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.
தொடர்புடையது

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31 ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


