மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்...

News image

மதுக் கடைகள் மூடல்

Updated On :18 ஏப்ரல் 2026, 8:28 pm

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப். 21- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை 3 நாள்கள், தோ்தல் வாக்கு எண்ணிக்கை அன்று (மே 4) அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்லை முன்னிட்டு வாக்குப்பதிவு அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் உரிமம் பெற்று இயங்கிவரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் உள்ளிட்டவை வரும் ஏப். 21 முதல் (செவ்வாய்க்கிழமை) முதல் வாக்குப் பதிவு நாளான ஏப். 23 -ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மே 4 -ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. விதிகளுக்கு மாறாக, மது விற்பனை ஏதும் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.