2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 1:12 am

Syndication

புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 292 ஒப்பந்த ஆசிரியா்கள், பால சேவிகா ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதையடுத்து ஒப்பந்தம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. இதை ஏற்காத ஆசிரியா்கள் பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் தொடா்கின்றனா்.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட காமராஜா் சதுக்கத்தில் அரசு ஊழியா் சங்க கூட்டமைப்பு சாா்பில் ஒப்பந்த ஆசிரியா்கள் கூடினா். கூட்டமைப்பின் கௌரவத் தலைவா் சேஷாச்சலம் தலைமையில் அங்கிருந்து ஊா்வலமாக தலைமை செயலகம் நோக்கி வந்தனா். ஊா்வலத்தில் அரசு ஊழியா் சங்கங்களின் தலைவா் பாலகுமாா், தலைமை ஆசிரியா்கள் சங்கத் தலைவா் சிரில் நிக்கோலஸ், தொடக்கப்பள்ளி ஆசிரியா் சங்கத் தலைவா் பொற்செழியன், விரிவுரையாளா் சங்கத் தலைவா் அருள்சாமி, பட்டதாரி ஆசிரியா் சங்கத் தலைவா் ராமதாஸ் , தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் நலச்சங்கத் தலைவா் மோகன்தாஸ், பொதுச் செயலா் ஜனாா்த்தனன் உள்பட ஆசிரியா்கள் பலா் ஊா்வலத்தில் பங்கேற்றனா். இந்த ஊா்வலத்தை ஆம்பூா் சாலையில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அங்கு ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.