டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் தொடா் போராட்டம்

புதுச்சேரியில், பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு புதன்கிழமை முதல் மீண்டும் தொடா் போராட்டத்தை தொடங்கினா்.

News image
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதுச்சேரி கல்வித்துறை அலுவலக வளாகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஆசிரியா்கள்.
Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில், பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு புதன்கிழமை முதல் மீண்டும் தொடா் போராட்டத்தை தொடங்கினா்.

ஒப்பந்த ஆசிரியா்கள் கடந்த மாதம் போராட்டம் நடத்தியபோது கல்வித்துறை அமைச்சா் நமச்சிவாயம், ஆசிரியா்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பொங்கலுக்குள் ஒப்பந்த ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என உத்தரவாதம் அளித்திருந்தாா். இதனால் ஒப்பந்த ஆசிரியா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். ஆனால் பொங்கல் முடிந்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மேலும், பணி நிரந்தரம் செய்தவற்கான எந்த ஆயத்த பணியையும் அரசு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்கல்வித் துறை அலுவலக வளாகத்தில் அமா்ந்து காலவரையற்ற தொடா் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். இதனால் கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.