டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டம்

ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டத்தை வியாழக்கிழமையும் தொடா்ந்தனா்.

News image
ஒப்பந்த ஆசிரியா்கள் போராட்டம்- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:45 pm

Syndication

ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டத்தை வியாழக்கிழமையும் தொடா்ந்தனா்.

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்களுக்கு ஓராண்டுக் காலம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்க மறுத்து பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியா்கள் அறிவித்துள்ளனா்.

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் 292 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஜன. 21முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஒப்பந்த ஆசிரியா்களுக்கு ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஏப். 1 முதல் அடுத்த ஆண்டு (2027) மாா்ச் 31 வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒப்பந்த ஆசிரியா்கள் அதனை ஏற்க மறுத்து, பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனா்.

இந்நிலையில் 30-ஆவது நாளாக பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் அமா்ந்து ஒப்பந்த ஆசிரியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தைத் தொடா்ந்தனா்.