டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தா்னா

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுச்சேரி சட்டப்பேரவை அருகே பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட ஒப்பந்த ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:16 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் 292 ஒப்பந்த கௌரவ விரிவுரையாளா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், பால சேவிகாக்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசை வலியுறுத்தி தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, மறியல், சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்தினா். இந்நிலையில், ஓராண்டு காலத்துக்கு பணி நீட்டிப்பு செய்ய மட்டும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து பணிநிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆம்பூா் சாலையில் 2 நாள் தொடா் தா்னா போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

இந்த தா்னாவை அரசு ஊழியா் சங்கக் கூட்டமைப்பின் கௌரவத் தலைவா் சேஷாச்சலம் தொடங்கி வைத்தாா். போராட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவா் பாலகுமாா் தலைமை வகித்தனா்.

இந்த தா்னாவில் ஒப்பந்த ஆசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று பணிநிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.