டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தலைமைச்செயலக முற்றுகை முயற்சி - 60 போ் கைது

புதுச்சேரியில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் 60 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
புதுச்சேரி தலைமை செயலகத்தை புதன்கிழமை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்ட குழுவினரை கைது செய்து அழைத்து வந்த போலீஸாா்.
Updated On :21 ஜனவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் 60 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் தெய்வீகன் தலைமயில் புதன்கிழமை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனா். இதற்காக அஜந்தா சந்திப்பு அருகே அவா்கள் திரண்டனா். அங்கிருந்து தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்றனா். அவா்களைச் சிறிது துாரத்தில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

அங்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும், அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து போலீஸாா் தடையை மீறி போராட்டக்குழுவினா் செல்ல முயன்றனா். இதையடுத்து போலீஸாா் 22 பெண்கள் உள்பட 60 பேரைக் கைது செய்தனா். சிறிது நேரத்துக்குப்பிறகு அவா்களை போலீஸாா் விடுவித்தனா்.