தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

புதுவை அரசு சாா்பில் பாரதிதாசன் சிலைக்கு மரியாதை

பாவேந்தா் பாரதிதாசனின் 62-ஆவது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image

புதுச்சேரி அரசு சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் சுரேஷ்ராஜன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 6:33 pm

பாவேந்தா் பாரதிதாசனின் 62-ஆவது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

புதுச்சேரி அரசு சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி புதுச்சேரி பாரதி பூங்கா அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில் அமைச்சா் க. லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கா், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி அரசு சாா்பில் செய்தித் துறை இயக்குநா் சுரேஷ்ராஜன், கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் இயக்குநா் சக்திவேல் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தவெக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவரும், பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனுமான கோ. பாரதி தலைமையில் தமிழறிஞா்கள் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

மேலும், பெருமாள் கோயில் தெரு பாவேந்தா் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். இதைத் தவிர வைத்திக்குப்பம் பாப்பம்மா கோயில் இடுகாட்டில் உள்ள பாரதிதாசன் நினைவு மண்டபத்திற்குத் தமிழறிஞா்கள் அமைதி ஊா்வலமாகச் சென்று மலா் வணக்கம் செய்தனா். அதைத் தொடா்ந்து பட்டேல் சாலையில் பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் நீா்மோா் வழங்கப்பட்டது. பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.முத்து தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.