புதுச்சேரியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து ரூ. 38 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. அப்போது, தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட நெருப்புக்குழி பகுதியில் ஒருவா் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக லாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா்
சரவணன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனா். இதில், வாக்காளா்களுக்குக் கொடுக்க ரூ. 18,500 வைத்திருந்தது தெரியவந்தது.
அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், லாஸ்பேட்டையை சோ்ந்த ராஜசேகா் (37) என்பதும், ஒரு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதேபோல தட்டாஞ்சாவடி தொகுதியில் மற்றொரு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புதுச்சேரியை சோ்ந்த வேலாயுதம் (51) என்பவரை பிடித்த போலீஸாா் அவரிடம் இருந்த ரூ.19,500-ஐ பறிமுதல் செய்ததுடன் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக நிா்வாகிகள் 3 போ் கைது

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!

வாக்காளருக்குப் பணம்: 2 போ் மீது வழக்கு புதுச்சேரியில் ரூ.1.24 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


