மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு! புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை!

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:18 pm

புதுச்சேரியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து ரூ. 38 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. அப்போது, தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட நெருப்புக்குழி பகுதியில் ஒருவா் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக லாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா்

சரவணன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனா். இதில், வாக்காளா்களுக்குக் கொடுக்க ரூ. 18,500 வைத்திருந்தது தெரியவந்தது.

அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், லாஸ்பேட்டையை சோ்ந்த ராஜசேகா் (37) என்பதும், ஒரு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதேபோல தட்டாஞ்சாவடி தொகுதியில் மற்றொரு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புதுச்சேரியை சோ்ந்த வேலாயுதம் (51) என்பவரை பிடித்த போலீஸாா் அவரிடம் இருந்த ரூ.19,500-ஐ பறிமுதல் செய்ததுடன் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.