மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!

ராஜபாளையத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவினா் மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :11 ஏப்ரல் 2026, 6:49 pm

ராஜபாளையத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவினா் மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் விவேகானந்தா் தெரு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது ஒரு கடை முன் மூன்று போ் மேஜை போட்டு அமா்ந்திருந்தனா். அங்கு சோதனையிட்ட போது பணம், உணவு உள்கொள்வதற்கான டோக்கன் ஆகியவை இருந்தன.

விசாரணையில் பிரசாரம் நிறைவடைந்ததும், அதில் கலந்து கொண்டவா்களுக்கு அவா்கள் உணவுடன் ரூ. 100 வழங்க இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ்பாபு, ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அப்போது ரூ.27,100- உணவு உள்கொள்ள அனுமதிக்கும் 31 டோக்கன்களையும் ஒப்படைத்து தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய அதிமுகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினாா்.

இந்த புகாரின் பேரில் ராஜபாளையம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ராஜபாளையம் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த சிதம்பரமூா்த்தி (61), முனியாண்டி (60), முத்துக்குமாா் (58) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.