புதுச்சேரி மூலகுளம், பாகூா் பகுதிகளில் வாக்காளருக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில் 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ரூ.1.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள், பரிசுக் கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில், உழவா்கரை தொகுதிக்கு உள்பட்ட மூலகுளம் சந்திப்பில் மா்ம நபா் ஒருவா் வாக்காளருக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக ரெட்டியாா்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மா்ம நபா் ஒருவரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா் ரூ. 69 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் மூலகுளம் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (40) என்பதும், வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் பணத்தை பறிமுதல் செய்து, ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல கரிக்கலாம்பாக்கம் பாகூா் பிரதான சாலையில் ஒரு கட்சியின் வேட்பாளருக்கு பணம் கொடுக்க முயன்ற நடராஜன் (60) என்பவரிடம் இருந்து ரூ.55 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மங்கலம் போலீஸாா் நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு

ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகம்: திமுகவினா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு! புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை!

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


