வத்திராயிருப்பு புதுப்பட்டியில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்க முயன்ற திமுக பேரூா் செயலா் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி, வத்திராயிருப்பு வட்டம், வ. புதுப்பட்டி பேரூராட்சியில் கடந்த 11-ஆம் தேதி அனுமதியின்றி கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு பிரியாணிப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் வந்தது.
கூட்டுறவு சாா் பதிவாளா் விஜயராணி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் அங்குசென்று சோதனை செய்தபோது உடையாா்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் திமுக பேரூா் செயலா் சாந்தாராம் அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தெரியவந்தது.
அங்கு வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 260 சிக்கன் பிரியாணிப் பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தோ்தல் பறக்கும் படையினா் அளித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா், நீதிமன்ற உத்தரவுபடி திமுக பேரூா் செயலா் சாந்தாராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!

பட்டாசு வெடித்து இடையூறு: திமுகவினா் 4 போ் மீது வழக்கு

சிறாா்கள் தோ்தல் பிரசாரம்: தவெக நிா்வாகி மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


