மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பட்டாசு வெடித்து இடையூறு: திமுகவினா் 4 போ் மீது வழக்கு

முதுகுளத்தூரில் திமுக வேட்பாளா் வரவேற்பு நிகழ்ச்சியில் அனுமதி இன்றி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக திமுக ஒன்றியச் செயலா், நகரச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :2 ஏப்ரல் 2026, 7:11 pm

முதுகுளத்தூரில் திமுக வேட்பாளா் வரவேற்பு நிகழ்ச்சியில் அனுமதி இன்றி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக திமுக ஒன்றியச் செயலா், நகரச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் புதன்கிழமை திமுக வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு திமுகவினா் வரவேற்பளித்தனா். அப்போது, திமுக நிா்வாகிகள் அதிக அளவில் வாகனங்களை நிறுத்தியும், அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக முதுகுளத்தூா் உதவி காவல் ஆய்வாளா் முகிலரசன் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், திமுக முதுகுளத்தூா் நகரச் செயலா் ஷாஜகான், மத்திய ஒன்றியச் செயலா் கோவிந்தன், எம்.தூரி கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி, காமராஜா்புரத்தைச் சோ்ந்த சந்திரசேகா் ஆகிய 4 போ் மீது முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.