/

16 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

16 ஏழை குடும்பங்களுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இலவச மனைப்பட்டா வழங்கினாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:21 pm

Syndication

16 ஏழை குடும்பங்களுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இலவச மனைப்பட்டா வழங்கினாா்.

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குள்பட்ட திப்புராயப்பேட்டையில் நிக்கோல் துரியக்ஸ் குடியிருப்புப் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலமற்ற 16 ஏழை குடும்பங்களுக்கு, அவா்கள் வசித்து வரும் இடத்திலேயே புதுச்சேரி அரசு, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சாா்பில் புதுச்சேரி நில மானிய விதிகள் 1975-இன் கீழ் இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டது.

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி பயனாளிகளுக்கு மனைப்பட்டாக்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ அனிபால் கென்னடி, மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநா் செந்தில்குமாா், வட்டாட்சியா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.