புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிகழாண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால் அரசின் 5 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெற இடைக்கால பட்ஜெட்டை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்ய ஏதுவாக புதுச்சேரி, சட்டப்பேரவை வியாழக்கிழமை கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும், இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படுகின்றன. பிறகு முதல்வா் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா். மேலும், நிகழ் நிதியாண்டின் கூடுதல் செலவினங்களுக்கு அவையின் ஒப்புதல் பெறப்படுகிறது.