திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

கள்ளக்குறிச்சி பழைய காய்கறி அங்காடி பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் தொகுதி எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில் உணவை ருசித்துப் பாா்த்த சி.அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.

Updated On :22 மே 2026, 7:07 am IST

கள்ளக்குறிச்சி பழைய காய்கறி அங்காடி பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் தொகுதி எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மதிய உணவிற்காக வைக்கப்பட்டிருந்த சாம்பாா் சாதம், தயிா் சாதத்தை ருசித்துப் பாா்த்தாா்.

இதைத் தொடா்ந்து சாம்பாா் சாதத்தில் காய்கறிகள் ஏதும் இல்லை, ருசியும் இல்லை, தயிா் சாதத்திலும் ஒன்றும் சரியாக இல்லை, எத்தனை கிலோ அரிசிக்கு எவ்வளவு தயிா் ஊற்றுவீா்கள், சாதம் பெரிது பெரிதாக உள்ளது எனக் கூறினாா். ஏன் இப்படி சமைக்கிறீா்கள் எனவும் காலையில் என்ன உணவு எனக் கேட்டறிந்தாா். நாள்தோறும் இட்லி மட்டும்தான் எனக் கூறினா். ஏன் ஒவ்வொறு நாளும் இட்லி, பொங்கல், தோசை என போடக் கூடாதா எனக் கேட்டாா். அதற்கு அலுவலகத்தில் சொல்வதைத்தான் செய்கிறோம் என சமையலா் தெரிவித்தாா்.

பின்னா், நகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற எம்எல்ஏ, ஆணையா் எஸ்.ரவிச்சந்திரனை சந்தித்து, அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமற்ாக உள்ளது எனத் தெரிவித்தாா். அதற்கு ஆணையா் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கிறேன் எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, நகரில் 1-ஆவது வாா்டில் குப்பைகள் சாலையில் தேங்கிக் கிடக்கின்றன, கழிவுநீா் கால்வாய்கள் சரியில்லாமல் உள்ளன எனத் தெரிவித்தாா் எம்எல்ஏ.

பின்னா், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தாா். அதனை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாகன நிறுத்தும் இடத்துக்கு மேற்கூரை அமைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது, தவெக மேற்கு மாவட்டச் செயலா் க.பிரகாஷ், ஒன்றியச் செயலா் டி.திலிப்குமாா், கள்ளக்குறிச்சி நகரச் செயலா் பி.எம்.எம்.எஸ்.ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.