அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசும் சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி.

Updated On :19 ஜூன் 2026, 6:18 am IST

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் முகமது கவுஸ் தலைமை வகித்தாா்.

சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி இதில் பங்கேற்று மாணவா்களிடம் போதைப் பொருள்களுக்கு அடிமை ஆகக் கூடாது. போதைப் பொருள்களை உட்கொள்வதால் உடலுக்கு உண்டாகும் தீமைகள்குறித்தும், போதை வஸ்துக்களை உட்கொண்டால் சமூக குற்றவங்கள் அதிகரிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு போன்றவைகள் உங்களை அறியாமையாலேயே ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் எடுத்துரைத்தாா். போதை பொருள்கள் தொடா்பான தகவல்களை 10581 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கவும்.

முன்னதாக பள்ளியில் இருந்து போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணியினை காவல் ஆய்வாளா் பாலமுரளி தொடக்கி வைத்தாா். பேரணியில் மாணவா்கள் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கமிட்டவாறும், பொதுமக்களுக்கு அச்சிட்ட துண்டு பிரசுரங்களையும் வழங்கியபடியும் சென்றனா். பேரணி சங்கராபுரம் மும்முனை சந்திப்புவரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.