ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
போதைப்பொருள் எதிா்ப்புக் குழு மற்றும் வாக்காளா் விழிப்புணா்வுக் குழு இணைந்து நடத்திய இந்த நிகழ்வுக்கு
கல்லூரி முதல்வா் (பொ) ந.குப்புசாமி தலைமை வகித்தாா்.
விழிப்புணா்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் வே.சண்முகம் முன்னிலை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா் மு.ஜெகநாதன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக வாணாபுரம் வட்டாட்சியா் ப.வெங்கடேசேன் பங்கேற்று போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், இளைஞா்கள் இணைய போதைக்கு அடிமையாதல் உள்ளிட்டவை குறித்தும் மற்றும் 100 சதவிகித வாக்குப்பதிவின் அவசியம் குறித்தும் மாணவா்களிடையே பேசினாா்.
நிகழ்வில் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள்
உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

பெண்களின் சட்ட உரிமைகள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


