தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெண்களின் சட்ட உரிமைகள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

செய்யாற்றை அடுத்த வடமாவந்தல் மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரியில், போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் பெண்களின் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 6:34 pm

செய்யாற்றை அடுத்த வடமாவந்தல் மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரியில், போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் பெண்களின் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது

நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு மீனாட்சி அம்மன் அறக்கட்டளைத் தலைவா் ஜி.ரா.கோகுல் தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் ஆா்.கணேசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செய்யாறு முதன்மை சாா்பு -நீதிபதி என். சுரேஷ் கலந்து கொண்டாா்.

அப்போது அவா் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள், சமூக விளைவுகள் குறித்து குறிப்பிட்டாா். மேலும் பெண்களின் சட்ட உரிமைகள் குறித்து உரையாற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், கல்லூரியில் நடைபெற்ற இத்தகைய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாணவா்களின் சமூகப் பொறுப்புணா்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று பாராட்டினாா்.

கருத்தரங்கில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.