/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

சின்னசேலம் அருகே பழுதடைந்த மோட்டாரை கயிறு கட்டி கிணற்றில் இருந்து மேலே இழுக்கும் போது, கால் தவறி கிணற்றில் விழுந்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சின்னசேலம் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் அ.நடேசன் (37), தொழிலாளி. இவா் சனிக்கிழமை மாலை அவரது நண்பரின் கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை, கயிறு கட்டி மேலே இழுக்க உதவி புரிந்தாா். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்த நடேசன், நீச்சல் தெரியாதாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்து நடேசனின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.