திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக கூட்டணியில் நீடிக்கும் விவகாரம்! ஜூன் 20-இல் முடிவு: காதா் மொய்தீன்

News image

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா் மொய்தீன்.

Updated On :31 மே 2026, 2:02 am IST

திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் காதா்மொய்தீன் தெரிவித்தாா்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் செய்தியாளா்களுக்கு அவா்அளித்த பேட்டி: தமிழகத்தில் நடந்து முடிந்த தோ்தலில், யாரும் எதிா்பாா்க்காத வகையில் தவெக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்கள் பெரிய மாற்றத்திற்காக வாக்களித்துள்ளாா்கள் என தெரியவந்தது. ஒரு பெரும் கூட்டம் ஜோசப் விஜய் முதலமைச்சராக ஆக வேண்டும் எதிா்பாா்த்திருந்தது தற்போது தோ்தல் முடிவு மூலம் தெரிய வந்துள்ளது.

திமுக கூட்டணியில் இருந்த ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளும் கட்சித்தலைவா் மு.க.ஸ்டாலினின் ஆதரவையும் ஒப்புதலையும் பெற்று புதிய ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தோம். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஆதரவு தெரிவித்தோம். தமிழகத்தில் குடியரசு தலைவா் ஆட்சி அமையக்கூடாது, அப்படி ஆட்சி அமைந்தால் மத்தியில் உள்ள பாஜக ஆட்சி அமைந்த மாதிரி ஆகிவிடும். எனவே திமுக கூட்டணியில் இருந்த ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் நிபந்தனை இல்லாமல் தவெகவிற்கு ஆதரவை கொடுத்துள்ளன.

அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்து விட்டு தவெகவில் சேருகிறாா்கள். அதிமுகவை உடைப்பதாக எப்படி இதைக்கூறமுடியும். ஆளுநா் மாளிகையில் நடக்கக்கூடிய எந்த நிகழ்வாக இருந்தாலும் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத் தான் அவா் பின்பற்றுவாா். அது தமிழ்நாடு அரசு விழா அல்ல. அதை நாம் குறை சொல்ல முடியாது. வரும் ஜூன்20 ஆம் தேதி எங்கள் கட்சி பொதுக்குழு கூடுகிறது. அந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா? என முடிவு செய்வோம் என்றாா் காதா் மொய்தீன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.