திமுக கூட்டணியே வெற்றி பெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காஜாமியான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் தனது வாக்கைப் பதிவு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளா்கள் அமோக வெற்றி பெறுவா்.
200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கிடைக்கும் வெற்றி செய்தி திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு இருக்கிறது என்பதை நிரூபிக்கும்.
தமிழகத்தைப் பொருத்தவரை, திராவிட மாடல் ஆட்சிதான் முதல் முனை. நான்கு முனை, ஐந்து முனை என்பதெல்லாம் இல்லை. நான் வாக்களித்துள்ள திருச்சி கிழக்கு தொகுதி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணியே நிச்சயமாக வெற்றி பெறும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் தொகுதியில் பின்னடைவிலிருந்து முன்னேறி வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

பாபநாசம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி

பேராசிரியா் காதா் மொய்தீன் வாக்கு சேகரிப்பு!

பாபநாசத்தில் கே.எம். காதா்மொகிதீன் பிரசாரம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

