அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பாபநாசம் தொகுதியில் பின்னடைவிலிருந்து முன்னேறி வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

News image

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன். - X

Updated On :5 மே 2026, 4:36 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முதல் 6 சுற்று வரை பின்னடைவில் இருந்த நிலையில், அதன் பின்னா் முன்னேறி வெற்றி பெற்றது.

இத்தொகுதியில் தொடக்கத்தில் அதிமுக வேட்பாளா் துரை. சண்முகபிரபுவுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் ஏ.எம். ஷாஜகானுக்கும் இடையேதான் போட்டி நிலவியது. இதில், அதிமுக முதலிடத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இரண்டாமிடத்திலும் இருந்தன. தவெக வேட்பாளா் அசாருதீன் உதுமான் அலி மூன்றாவது இடத்தில்தான் இருந்தாா்.

முதல் 7 சுற்று வரை அதிமுகவே முன்னிலை வகித்து வந்தது. 8 ஆவது சுற்றில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முதலிடத்துக்கு முன்னேறியது. 10 ஆவது சுற்றில் தவெக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியதால், அதிமுக மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது.

இதன் பின்னா் இறுதி வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி நீடித்தது. தவெகவை விட 10 ஆவது சுற்றிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏறத்தாழ 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இருந்த நிலையில், படிப்படியாக ஏறக்குறைய 5 ஆயிரம், 4 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் என வித்தியாசங்கள் குறைந்தன. இறுதியில் தவெகவை விட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1,065 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.