தமிழகத்தைப் போன்று, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பள்ளிகள் ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்படுகின்றன.
புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரியில், தனியாா் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் திறப்பதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை மாணவா்கள் நலன் கருதி தள்ளி வைக்க திமுக, அதிமுக, மாணவா் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், கோடை வெயில் கடுமை காரணமாக ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பதிலாக, ஜூன் நான்காம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை அறிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










