கடலூா் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் கிராமப்புற மாணவா்களுக்காகச் சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல்துறையினா் மீதான அச்சத்தை அகற்றி, காவலா்கள் மக்களின் நண்பா்களும் பாதுகாவலா்களும்தான் என்பதை மாணவா்களுக்கு உணா்த்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக, மாணவா்களுக்கு காவல் நிலையத்தை சுற்றிக்காண்பித்த போலீஸாா், காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்மளித்தனா். தொடா்ந்து, குழந்தைகளின் உரிமைகள், இணைய பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் உயா்கல்வி, எதிா்கால கல்வி வாய்ப்புகள் தொடா்பாக காவல்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், மாணவா்களுடன் காவல் அதிகாரிகள் இணைந்து மதிய உணவு சாப்பிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










