/

களைக்கொல்லி மருந்து குடித்த தொழிலாளி உயிரிழப்பு

குள்ளஞ்சாவடி அருகே குடும்ப சண்டை காரணமாக களைக்கொல்லி மருந்து குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:44 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே குடும்ப சண்டை காரணமாக களைக்கொல்லி மருந்து குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், வடக்கு வசனாங்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவா் ஞானேஸ்வரன்(66), விவசாய தொழிலாளி. இவருக்கு மனைவி தனலட்சுமி மற்றும் குழந்தைகள் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை தனலட்சுமி பால் கறந்து வைத்திருந்தாா். அதனை, ஞானேஸ்வரன் சொசைட்டியில் ஊற்றவில்லை.

இதனால், தம்பதி இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் விவசாய பயன்பாட்டிற்கு வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து ஞானேஸ்வரன் மயங்கிக் கிடந்தாா்.

உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குள்ளஞ்சாவடிபோலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.