அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

வளவனூா் அருகே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 1:45 am IST

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரைச் சோ்ந்தவா் க.கண்ணன்(46). திருமணம்ஆனவா். இவா் தனியாா் சரக்கு லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப் பாா்த்து வந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூருக்கு சரக்கு இறக்குவதற்காக லாரியில் வந்திருந்த கண்ணன், திங்கள்கிழமை கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடி அருகேயுள்ள ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளாா். அப்போது கண்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினாா். இதையடுத்து அவரை சக தொழிலாளா்கள் மீட்டு புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, கண்ணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.